கொரோனா வைரஸ் தொற்றுச் சோதனை, சிகிச்சை ஆகியவை தொடர்பில் அனைவருக்கும் பரவலான சமவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்கு சுமார் 7 பில்லியன் டொலர் தொகை திரட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான சர்வதேச நிதி திரட்டும் மாநாடு கடந்த சனிக்கிழமை பிரசல்ஸில் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய ஆணையம், அமெரிக்கா உள்ளிட்ட எண்ணற்ற நாடுகள் நிதி வழங்கியுள்ளன. அந்தத் தொகையைக் கொண்டு பின்தங்கியுள்ளோருக்கு உதவுவதில் கவனம் செலுத்தப்படும்.
உலகெங்கும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 மில்லியனை எட்டியிருக்கும் வேளையில் இவ்வாறு நிதி திரட்டப்பட்டுள்ளது.
Mon, 06/29/2020 - 06:00
from tkn