ஜிஹாதிக்களின் தாக்குதலில் நைஜீரியாவில் 59 பேர் பலி

வடகிழக்கு நைஜீரியாவில் ஜிஹாதிக்கள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

போர்னோ மாநிலத்தின் குபியோ மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமம் ஒன்றுக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை நுழைந்த துப்பாக்கிதாரிகள் பல டஜன் பேரை கொன்றுள்ளனர்.

ஒரு பழிவாங்கும் தாக்குதல் என்று நம்பப்படும் இந்தத் தாக்குதலில் அந்த கிரமம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 59 சடலங்கள் மீட்கப்பட்டதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

“சிலர் சுடப்பட்டும் மேலும் சிலர் வாகனத்தால் முட்டியும் கொல்லப்பட்டுள்ளனர்” என்று ஜிஹாத் எதிர்ப்புப் போராட்டக் குழு தலைவர் பபகுரா கோலோ தெரிவித்ததார்.

வடகிழக்கு நைஜீரியாவில் பொக்கோ ஹராம் மற்றும் இஸ்லாமிய அரசு குழுவுடன் தொடர்புபட்ட ஜிஹாதிக்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thu, 06/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை