ரூ. ஒரு கோடி பெறுமதியான ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று (05) முற்பகல் 11.45 மணியளவில் தெமட்டகொடை, ஆராம வீதிக்கு திரும்பும் சந்திக்கு அருகில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, 1 கிலோ 23 கிராம் 660 மில்லி கிராம் ஹெரோயினை மீட்டுள்ள, குற்றத் தடுப்பு பிரிவினர் மீட்கப்பட்ட ஹெரோயினுடன் சந்தேகநபரை, தெமட்டகொடைபொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு 10, கெத்தாரம அடுக்குமாடி தொடரில் வசிக்கும் 56 வயதான ஒருவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த ஹெரோயினின் பெறுமதி சுமார் ரூபா ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேநகபரை இன்று (06) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல்
➡️ அரசாங்க தகவல் நிலையம்
from tkn