பிரித்தானியா, மாலைதீவிலிருந்து 323 இலங்கையர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவு மற்றும் பிரித்தானியாவில் சிக்கியிருந்த 323 இலங்கையர் நேற்று நாடு திரும்பினார்கள். இதில் 169 இலங்கையர்கள் மத்தள மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்த தோடு பிரித்தானியாவில் இருந்து 154 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாடு திரும்பினார்கள்.

இந்நிலையில், அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, பரிசோதனை அறிக்கைகள் வெளிவரும் வரையில் அவர்கள் அனைவரும் விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரித்தானியாவில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 154 பேர் விசேட விமானத்தின் மூலம் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து விமான நிலையத்தில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

Thu, 06/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை