பிலிப்பைன்ஸிலிருந்து நாடு திரும்பிய 223 பேர்

நாடு திரும்ப முடியாமல் பிலிப்பைன்சில் சிக்கியிருந்த 223 இலங்கையர்கள் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நேற்று முன்தினம் இரவு 10.30க்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் P.C.R பரிசோதனை செய்யப்பட்டதுடன் அதன் முடிவுகள் கிடைக்கும் வரை அவர்கள் விமான நிலைய வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஜப்பானில் தங்கியிருந்த இலங்கை கடற்படை வீரர்கள் இருவரும் நேற்று அழைத்து வரப்பட்டனர்.

Sat, 06/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை