கொங்கோவில் ஆயுததாரிகள் தாக்குதல்களில் 19 பேர் பலி

பதற்றம் கொண்ட கிழக்குக் கொங்கோவில் ஆயுதக் குழு ஒன்று நடத்தி தாக்குதலில் 19 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கூட்டணி ஜனநாயகப் படை என்ற குழுவினால் கடந்த வெள்ளிக்கிழமை ஒன்பது பேர் கடத்தப்பட்ட நிலையில் அவர்களின் உடல்கள் வடக்கு கீவு மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் புகாகா என்ற கிராமத்தின் மீது அந்தக் குழு கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் மேலும் 10 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதில் ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் இருப்பதோடு சிலர் கொல்லப்பட்டு தீமூட்டப்பட்டிருப்பதாக அங்கிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பெனின் பிராந்தியத்தை சூழவிருக்கும் காட்டுப் பகுதியில் உள்ள தமது தளங்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக கூட்டணி ஜனநாயகப் படை கடந்த ஆண்டு தொடக்கம் சுமார் 500 பேரைக் கொன்றிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

 

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை