ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ள கொவிட்–19

கொரோனா வைரஸ் பெருந்தொற்று “புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தை” தற்போது எட்டி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. முடக்க நிலையால் மக்கள் சோர்வடைந்திருக்கும் அதேவேளை நோய்த் தொற்று அதிகரித்து வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

புதிய நோய்த் தொற்றுச் சம்பவங்கள் உச்சத்தை எட்டி இருக்கும் நிலையில் நாடுகள் மற்றும் மக்கள் தொடர்ந்து தீவிர விழிப்புணர்வுடன் இருக்கும்படி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரொஸ் அதனொம் கெப்ரியேசுஸ் தெரிவித்தார்.

“நோய்த்தொற்று துரிதமடைந்து வருகிறது. நேற்று (கடந்த வியாழன்) 150,000க்கும் அதிகமான புதிய சம்பவங்கள் பதிவாகின. இது ஒரே நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாகும்” என்று டெட்ரோஸ் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒன்பது மில்லியனை நெருங்கி இருப்பதோடு உயிரிழப்பு நான்கரை இலட்சத்தை கடந்துள்ளது.

“உலகம் ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. வீட்டில் இருப்பதால் அதிகமான மக்கள் சோர்வடைந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

பல நாடுகளும் தமது சமூக மற்றும் பொருளாதாரத்தை திறப்பதில் ஆர்வம் காட்டுவதை புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் வைரஸ் இன்னும் வேகமாக பரவுகிறது.

இன்னும் அது உயிராபத்துக் கொண்டது என்பதோடு பெரும்பாலான மக்கள் இன்னும் எளிதாக பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Mon, 06/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை