ஹொன்டுராஸ் ஜனாதிபதி ஜுவான் ஒர்லாண்டோ ஹர்னாண்டஸ், அவரது மனைவி மற்றும் இரு உதவியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் தமது உடல் நிலை மோசமடைந்திருந்ததாகவும் தமக்கு நோய்த் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜனாதிபதி ஹர்னாண்டஸ் தெரிவித்தார்.
தமது உடல்நிலை தற்போது சுகம்பெற்று வருவதாகவும் தொடர்ந்து தனிமையில் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். “தொடர்ந்து இயங்கி இந்த நோய்த் தொற்றை வீழ்த்த போதுமான பலம் மற்றும் வலிமை என்னிடம் இருப்பதாக உணர்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹொன்டுராஸில் இதுவரை 9,600க்கும் அதிகமான கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 330 பேர் உயிரிழந்துள்ளனர்.
Thu, 06/18/2020 - 06:00
from tkn