கொவிட்-19; குணமடைந்த கடற்படையினர் 522ஆக அதிகரிப்பு

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 34 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (07) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 17 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலும், 12 பேர் இரணவில  வைத்தியசாலையிலும், 05 பேர் IDH வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். அவ்வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில், அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 522ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட  போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மேலும் 14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mon, 06/08/2020 - 11:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை