சீனாவில் டாங்கர் வெடித்து பலர் பலி: 189 பேர் காயம்

தென் கிழக்கு சீனாவின் நெடுஞ்சாலை ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு டாங்கர் லொரி ஒன்று வெடித்ததில் 18 பேர் கொல்லப்பட்டதோடு குறைந்தது 189 பேர் காயமடைந்தனர்.

இந்த வெடிப்பினால் அருகில் இருக்கும் கட்டடங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. தீப்பற்றி எரியும் கட்டடத்தின் மீது தீயணைப்புப் படையினர் நீரை பீச்சயடிப்பது புகைப்படம் ஒன்றில் தெரிகிறது.

திரவ வாயுவை எடுத்துச் செல்லும் டாங்கர் லொரியே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அந்த லொரி தொழிற்சாலை ஒன்றில் விழுந்ததை அடுத்து இரண்டாவது வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் இடிந்திருப்பதாகவும் 189 பேர் ஆறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வென்லிங் நகர நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் பற்றி விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Mon, 06/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை