மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி

கட்டுப்பாடுகளுடன் கடுமையான வழிகாட்டல்

ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, கலால் திணைக்களம் தெரிவித்தது.

மொத்த விற்பனை அனுமதிப்பத்திரம் (FL3), சில்லறை விற்பனை அனுமதிப்பத்திரம் (FL4), பியர் வகைகள் மற்றும் வைன் சில்லறை விற்பனை அனுமதிப்பத்திரம் கொண்டவர்களுக்கு கடுமையான வழிகாட்டலின் கீழ் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள கொழும்பு, கம்பஹா மாவட்ட பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 05/13/2020 - 13:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை