கட்டுக்கரை குளம் சிறுபோகத்துக்காக திறந்துவிடப்பட்டது

மன்னார்-கட்டுக்கரை குளத்தின் கீழான சிறுபோக நெற் செய்கைக்கான நீர் விநியோகம் நேற்று காலை  வைபவ ரீதியாக சமையத் தலைவர்களின் ஆசியோடு 11 ஆம் கட்டை வாய்க்கால் துருசில் சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் நடராசா யோகராசா தலைமையில் நடைபெற்றது. நீர்ப்பாசன பொறியியலாளர்கள், சமயத் தலைவர்கள், கட்டுக்கரைக் குளத்தின் வாய்கால் அமைப்பு பிரதிநிதிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சமயத் தலைவர்களின் இறை வேண்டுதலுடன் பொங்கல் படையளிட்டு சமைய அனுஸ்டானங்களுடன் மலர் துவி 11ஆம் கட்டை வாய்க்கால் துருசு சம்பிரதாய முறைப்படி அதிகாரிகளினால் திறந்து வைக்கப்பட்டது. வாய்க்காலில் பாய்ந்தோடிய நீருக்கும் மலர் தூவி கைகளைத்தட்டி விவசாயிகள் மகிழ்சி ஆரவாரம் செய்தனர்.

மன்னார் குறூப் நிருபர்

Thu, 05/28/2020 - 14:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை