மனைவியால் தாக்கப்பட்டு கணவர் பலி

அரலகங்வில, மெத்மஹிந்தாகம யாய -07 பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

37 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், தனது மனைவியினால் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொலைச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Thu, 05/14/2020 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை