பெரும்பாலான இடங்களில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகரித்துக் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், தென், ஊவா,  வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான  மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்,  மேல் மாகாணங்களிலும் புத்தளம்,  யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என்று  எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை,  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

Wed, 05/06/2020 - 09:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை