யாழ். தென்மராட்சி மிருசுவில் -மன்னன் குறிச்சி பகுதியில் இடம்பெற்றுள்ள வாள் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்
நேற்றிரவு (03), குறித்த பகுதியில் இரு தரப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் வாள்வெட்டில் முடிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (40) என்பவர் வெட்டுக் காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
வாள் வெட்டில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், ஒருவர் சிறு காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(சரசாலை நிருபர் - த.சபேசன், சுண்டுக்குளி நிருபர் – ஐங்கரன் சிவசாந்தன்)
from tkn