கிளி பிடிக்க தென்னை மரத்தில் ஏறிய சிறுவன் பலி

கிளி பிடிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறிய 13 வயதுச் சிறுவன் ஒருவன்,  மரம் முறிந்து வீழ்ந்ததில்  பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

யாழ். கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியில் நேற்று (30)  மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. .

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (13) எனும்  சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

Fri, 05/01/2020 - 11:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை