கிளி பிடிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறிய 13 வயதுச் சிறுவன் ஒருவன், மரம் முறிந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
யாழ். கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியில் நேற்று (30) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. .
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (13) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
Fri, 05/01/2020 - 11:57
from tkn