தலிபான்கள் மூன்று நாள் யுத்த நிறுத்த அறிவிப்பு

ஆப்காஸ்தானில் நேற்று ஆரம்பமான முஸ்லிம்களின் புனித நோன்புப் பெருநாளை ஒட்டு தலிபான்கள் அந்நாட்டு அரசுடன் மூன்று நாள் யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ஆப்கான் அரச படைக்கு எதிராக அண்மைக்காலத்தில் தலிபான்கள் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பை வரவேற்றியுக்கும் ஜனாதிபதி அஷ்ராப் கானி, தமது படையினர் இந்த யுத்த நிறுத்தத்தை மதிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூன்று நாள் யுத்த நிறுத்தம் நாட்டில் வன்முறைகள் நிலையாக குறைவதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. எனினும் 2018 ஆம் ஆண்டும் பெருநாள் கொண்டாட்டத்தில் இதேபோன்று யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டபோதும் அதனைத் தொடர்ந்து மீண்டும் வன்முறைகள் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 05/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை