கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கிரிந்திவெல, பல்லேகம சந்திக்கு அருகில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர், ரதவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (14) மாலை, இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இக்கொலையில் முடிந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொலையை புரிந்த 52 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Fri, 05/15/2020 - 09:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை