அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல், கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் சொந்த ஊருக்கு இன்று (29) காலை எடுத்துச் செல்லப்பட்டது.
அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்கு வைப்பதற்காக அவரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விசேட ஹெலிகொப்டரில் இன்று காலை கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊருக்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது.
அமரர் ஆறுமுகனின் பூதவுடலை எடுத்துச் சென்ற ஹெலிகொப்டர், கம்பளையிலுள்ள மைதானம் ஒன்றில் தரையிறங்கி அங்கிருந்து தரைவழியாக மக்கள் அஞ்சலியுடன் ரம்பொடை, வேவண்டனுக்கு ஊர்வலமாக பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது.
(ஹட்டன் சுழற்சி நிருபர் – ஜி.கே. கிருஷாந்தன்)
Fri, 05/29/2020 - 12:21
from tkn