யாழில் போதையில் விபத்து ஏற்படுத்தியவர் கைது

மதுபோதையில் காரினை செலுத்தி வந்த நபர் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். ஸ்டேன்லி வீதி வழியாக இன்று (15)  மதியம்  நிறை மதுபோதையில் காரினை செலுத்தி வந்த  ஒருவர், வெலிங்டன் சந்திக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  சைக்கிள்கள் மற்றும் மோட்டர் சைக்கிள்கள் என்பவற்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மதுபோதையில் காரை செலுத்தியவரை கைது செய்துள்ளனர். அத்தோடு,  காரையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

நீண்ட காலத்திற்கு பின்னர் நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டதனையடுத்து , மதுபோதையில் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

 

Fri, 05/15/2020 - 17:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை