வவுனியா பேருந்து நிலையத்தில் பெருமளவிலான பயணிகள்

வடக்கு மாகாணத்தில் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பேருந்துகளில் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும் வேறு மாகாணங்களில் இருந்து வட மாகாணத்திற்கு நுழைவதற்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து இறுக்கமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.

இதுவரை காலமும் தினமும் அரச, தனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் பாஸ் உள்ளோர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். போக்குவரத்து கட்டுப்பாடுகள் நேற்று தொடக்கம்  தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா பேருந்து நிலையத்தில் பெருமளவிலான பயணிகள் வருகை தந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

மேலும் வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து தனியார், அரச பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதுடன் வவுனியாவிலிருந்து வடமாகாணத்திற்குட்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கிடையிலும் பாலமோட்டை, போகாஸ்வேவ, வீரபுரம் ஊடாக செட்டிக்குளம் மற்றும் பூவரசங்குளம் ஊடாக மெனிக்பாம் ஆகிய உள்ளூர் சேவைகளும் நடைபெற்றன.

வவுனியா விசேட நிருபர்

Tue, 05/19/2020 - 11:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை