கட்டுக்கரை குளத்தின் கீழான விவசாயம்; ஈவு முறையில் பகிர்ந்தளிப்பதற்கு முடிவு

எதிர்வரும் காலங்களில் வாய்க்கால் அமைப்புகளுக்கும், வேறு அமைப்புகளுக்கும் விவசாயம் செய்ய அனுமதி வழங்குவது இல்லை என்றும் சிறு போக பயிர்ச் செய்கையின் போது நீரின் அளவை அடிப்படையாக கொண்டு கட்டுக்கரை குளத்தின் கீழ் காணி உள்ள விவசாயிகளுக்கு ஈவு முறையில் பகிர்ந்து அழிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறு போக பயிர்ச்செய்கை மேற்கொள்ளுவது தொடர்பான கூட்டம்  நேற்று காலை 10 மணியளவில் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டம் தொடர்பாக அரச அதிபர் மேலும் கூறுகையில்,

ஆரம்பத்தில் கூட்டத்தில் அரை ஏக்கர் படி திட்டத்தை நடை முறைப்படுத்த தீர்மானிக்கப் பட்டிருந்தது. சௌபாக்கியா திட்டத்தின் கீழ் அரை ஏக்கர் வீதம் ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நேற்றைய கூட்டத்தில் வருகை தந்திருந்த விவசாயிகளின் வேண்டுகோளுக்கு ஏற்பவும், வழமையான நடை முறைகளுக்கு அமைவாகவும் குறிப்பாக கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வரும் கட்டுக்கரை குளத்தின் கீழ் காணி உள்ளவர்களுக்கு ஈவு அடிப்படையில் பகிர்ந்து வழங்க தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் வாய்க்கால் அமைப்புகளுக்கும் வேறு அமைப்புகளுக்கும் விவசாயம் செய்ய அனுமதி வழங்குவது இல்லை என்றும் சிறு போக பயிர்ச் செய்கையின் போது நீரின் அளவை அடிப்படையாக கொண்டு கட்டுக்கரை குளத்தின் கீழ் காணி உள்ள விவசாயிகளுக்கு ஈவு முறையில் பகிர்ந்து அழிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் ஏழை விவசாயிகளுக்கு எதுவும் கிடைக்காத நிலை காணப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் சரியான முறையில் ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

புலவுக்குள் நெல் விதைப்பு செய்வது ஒரு தவறான செயற்பாடு. அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும்.

விதைப்பு ஆரம்பிக்கும் திகதியாக எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

மன்னார் குறூப் நிருபர்

Tue, 05/12/2020 - 11:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை