தீபம் ஊடகத்தின் இளம் ஊடகவியலாளர் விபத்தில் பலி

இளம் ஊடகவியலாளர் ஒருவர் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லாற்றில்  இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (13)  இடம்பெற்ற விபத்தில் உள்துறைமுக வீதி, திருகோணமலையைச் சேர்ந்த ரகுநாதன் மிதுன்சங்கர் (21) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வந்தாறுமூலையிலுள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ள இவர், நேற்று தனது சக ஊடகவியலாளர் ஒருவர் உட்பட 03 பேருடன் மொத்தம் 04 பேர் 02 மோட்டார் சைக்கிள்களில்  கல்லாற்றிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கோட்டைக்கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்னால் வீதியோரமாக தரித்து நின்றுள்ளனர். இந்நிலையில் பின்னால் பொருட்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், குறித்த ரகுநாதன் மிதுன்சங்கரின் நின்ற மோட்டார் சைக்கிளின் மீது பின்னால் மோதியுள்ளதனால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக,  இவ்விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்தோடு உழவு இயந்திரத்தை கைப்பற்றியுள்ளதுடன் அதன் சாரதியை கைது செய்துள்ளனர்.

மரணமடைந்த ரகுநாதன் மிதுன்சங்கர், தீபம் ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர் –வடிவேல்  சக்திவேல்)  

Thu, 05/14/2020 - 11:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை