படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவேந்தல்-Journalist Ayyathurai Nadesan Commemoration-Remembrance

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம்  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தல்-Journalist Ayyathurai Nadesan Commemoration-Remembrance

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் 11.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது.

நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள், கலந்து கொண்டு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தல்-Journalist Ayyathurai Nadesan Commemoration-Remembrance

ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் கடந்த 2004ஆம் ஆண்டு  மே 31ம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

இதேவேளை யாழ். ஊடக அமையத்தை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸார் சீருடையிலும் , சிவில் உடையிலும் குவிக்கப்பட்டு இருந்ததுடன், பொலிஸ் அதிகாரியொருவரும் சிவில் உடையில் வந்த ஒருவரும் ஊடக அமையத்தின் வந்து ஊடகவியலாளர் ஒருவரிடம் நிகழ்வு தொடர்பில் கேட்டறிந்து விபரங்களை பதிவு செய்து சென்றுள்ளனர்.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

Sun, 05/31/2020 - 14:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை