மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவை வவுனியாவில் நேற்று ஆரம்பம்

வவுனியாவில் இருந்து  மட்டுப்படுத்தப்பட்டளவில் மாகாணங்களுக்கிடையிலான  பேருந்து சேவைகள் வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக போக்குவரத்துச் சேவைகள் தடைப்பட்டிருந்தன.

இந்நிலையில் நேற்றிலிருந்து மாகாணங்களுக்கு இடையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டுப்படுத்தப்பட்டளவில் பேருந்து சேவைகள் நடைபெறுகின்றன. வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார நடைமுறையினை பின்பற்றி ஆசன இருக்கைகளிற்கு அளவாக பேருந்து சேவைகள் நடைபெறுகின்றன.

பயணம் செய்யும் பொது மக்கள் முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்து சுகாதார நடைமுறைகளை பின் பற்றினால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

கோவில்குளம் குறூப் நிருபர்

Thu, 05/28/2020 - 14:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை