சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணித்துள்ள உழைப்பாளிகளுக்கு எனது கௌரவம்

சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணித்துள்ள உழைக்கும் மக்களுக்கு எனது கௌரவமும் மரியாதையும்-President Gotabaya Rajapaksa-May Day Greeting

மே தினச் செய்தியில் ஜனாதிபதி

கொவிட் 19 நோய்த்தொற்றின் காரணமாக நாடு முகம்கொடுத்துள்ள சவால்களுக்கு மத்தியில் பெரும் அர்ப்பணிப்புகளை செய்து வரும் உழைக்கும் மக்களுக்கு எனது கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்துவதற்கு இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தை சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றேன்.

வரலாறு நெடுகிலும் நாம் முகம் கொடுத்த, வெற்றிகொண்ட சவால்கள் ஏராளம். அந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் நேரடி பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களும் முன்னிற்பவர்களும் நாட்டின் உழைக்கும் மக்களாகும். கடந்த காலத்தின் அனைத்து கஷ்டமான சந்தர்ப்பங்களையும் உழைக்கும் மக்களுடன் சேர்ந்து வெற்றிகொண்ட நாம் கொவிட் 19ஐயும் வெற்றிகொள்வோம் என்பது உறுதி.

சர்வதேச தொழிலாளர் தினம் உழைக்கும் மக்களின் ஒற்றுமை, பலம் மற்றும் புரட்சிப் பண்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் சந்தர்ப்பமாகும். உலகில் இன்று ஏற்பட்டுள்ள நோய்த்தொற்று காரணமாக முழு உலகிலும் உள்ள தொழிலாளர்களுக்கு இம்முறை அந்த வாய்ப்பு அற்றுப்போயுள்ளது. எனினும் மிகவும் சிறந்த, நேரிய சமூகமொன்றை உருவாக்குவதற்கு அவர்களிடமுள்ள திடவுறுதி மாற்றமின்றி தொடர்ந்திருக்கும் என நான் நம்புகின்றேன்.

எமது அரசாங்கம் எத்தகைய கஷ்டமான நிலைமையிலும் கூட நாட்டின் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்ததில்லை. அத்தகைய நிலைமைக்கு நாம் இடமளிக்கப் போவதுமில்லை. அவ்வாறே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தி உற்பத்தி, சேவை துறைகளை இற்றைப்படுத்தி உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கான சந்தர்ப்பங்களை பாதுகாக்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கடந்த வருட மே தினக் கொண்டாட்டங்களுக்கு கொடூர பயங்கரவாத தாக்குதல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நாம் அந்த கொடூர செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் எதிர்பாராதவிதமாக உலகில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றுக்கு மத்தியிலும் மே தினக் கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் இடம்பெறாது. எனினும் நியாயமான உரிமைகளுக்காக செய்யப்படும் போராட்டம் பலப்படுத்தப்பட வேண்டும். இலங்கை தேசத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் புதிதாக கட்டியெழுப்பும் கூட்டு முயற்சிக்கு சர்வதேச தொழிலாளர் தின பிரார்த்தனைகள் பலமாக அமையட்டும்!.

இலங்கையின் உழைக்கும் மக்களுக்கு எனது மரியாதையை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Fri, 05/01/2020 - 12:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை