கோவா, தக்காளி பயிர்ச் செய்கைகளை கைவிட தயாராகும் விவசாயிகள்

பதுளை மாவட்ட விவசாயிகள் தக்காளி மற்றும் கோவா பயிர்ச் செய்கைகளைக் கைவிட தீர்மானித்துள்ளனர்.

பண்டாரவளை, வெலிமடை, ஹப்புத்தளை போன்ற பகுதிகளில் மரக்கறிப் பயிர்ச் செய்கைகளுடன் தக்காளி மற்றும் கோவா பயிர்ச் செய்கைகளையும் விவசாயிகள் மேற்கொண்டுவந்தனர்.

தக்காளிப் பயிர்ச் செய்கை ஆகக் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டத்தால், அப்பயிர்ச் செய்கைக்கு செலவுசெய்த பணத்தைக்கூட பெறமுடியாத வகையில் விலை குறைவடைந்து காணப்படுகின்றது. அத்துடன், கோவாப் பயிர்ச் செய்கையிலும் இதேநிலை ஏற்பட்டிருந்தாலும் ஒருவகை நோயும் கோவாப் பயிர்ச் செய்கையை பாதித்துள்ளது.

ஆகவே, இவ்விருபயிர்ச்செய்கைகளையும் கைவிட விவசாயிகள் தீர்மானித்துள்ளனர்.  பெருந்தோட்டப் பகுதிகளிலேயே, இந்நிலை உக்கிரமடைந்துள்ளனது. இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(பதுளைவிசேடநிருபர்)

Tue, 05/12/2020 - 12:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை