தண்ணீர் பிரச்சினையை வைத்து வாக்கு வேட்டை; இதுவரை தீர்வு இல்லை

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட யொக்ஸ்போர்ட் தோட்டத்தில் பல வருடமாக நிலவிவரும் தண்ணீர் பிரச்சினைக்கான தீர்வு இதுவரை கிட்டவில்லையென தோட்ட பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மழைக்காலம் ஏற்பட்டால் முறையாக தண்ணீர் குடியிருப்புகளுக்கு வராத காரணத்தால் ஓரிடத்திலேயே தோட்ட மக்கள் குழுமி நின்று நீரை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் மக்களுக்கிடையே முரண்பாடுகள் அதிகரிக்கிறது.

இப்பிரச்சினையை மையப்படுத்தியே அரசியல் காலங்களில் வாக்கு வேட்டை இடம்பெறுகிறது. என்றாலும் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் பிரச்சினையை மறந்து விடுகின்றனர். கொட்டக்கலை பிரதேச சபையிடம் இது தொடர்பாக பல முறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு யொக்ஸ்போர்ட் தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

(பூண்டுலோயா நிருபர்)

Sat, 05/09/2020 - 11:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை