கொரோனா தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், மாலைதீவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் 288 பேரை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, இன்று (14) காலை மாலைதீவிற்கு விசேட விமானமொன்று புறப்பட்டுள்ளது.
UL 101 எனும் விசேட விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.30 மணிக்கு மாலைதீவு நோக்கி புறப்பட்டுள்ளது.
இவ்விமானம், முற்பகல் 11.30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் வந்தடையவுள்ளது.
Thu, 05/14/2020 - 10:23
from tkn