சொந்த போர்க் கப்பல் மீது ஈரான் தவறுதலாக தாக்குதல்

ஓமான் வளைகுடாவில் ஈரான் கடற்படை மேற்கொண்ட போர் பயிற்சியின்போது தவறுதலாக தமது சொந்த போர் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு அந்தக் கப்பல் மூழ்கியுள்ளது.

இந்த கடற்பாதையில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் நீடித்து வரும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஈரானின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் கடந்த ஞாயிறு மதியம் இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவத்தில் மற்றொரு போர் கப்பலில் இருந்தே குறித்த போர் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

“பயிற்சி இலக்கிற்காக கப்பல் நிறுத்தப்பட்ட வேளை இலக்கிற்கும் கப்பலுக்கும் இடையே போதுமான இடைவெளி இல்லாததால் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது” என்று ஈரான் அரச தொலைக்காட்சி அதன் இணைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

Tue, 05/12/2020 - 14:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை