முன்னாள் அமைச்சரின் பத்தரமுல்ல வீட்டிற்கு CID விஜயம்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, குற்றப் புலனாய்வு பிரிவுக்கு (CID) உத்தரவிடப்பட்டுள்ளது.
தாம் வழங்கிய பிணை உத்தரவை, கொழும்பு மேல் நீதிமன்றம் மாற்றம் செய்து அதனை நீக்கியுள்ளதனால், கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன CID இற்கு இவ்வுத்தரவை வழங்கியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய, குற்றப்ப புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழு, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை தேடி, பத்தரமுல்லவிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளை வேன் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பிற்கு அமைவான வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து, சட்டமா அதிபர் விண்ணப்பித்த மீள்திருத்த மனுவிற்கு அமைய, கொழும்பு மேல் நீதிமன்றம் அவரது பிணையை இரத்து செய்வதாக அறிவித்திருந்தது.
இன்று (13) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இவ்வுத்தரவை அறிவித்திருந்தார்.
from tkn