நீர் கட்டண பட்டியல் நிலுவைகளை செலுத்துவதற்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்தது.
இரண்டு நீர் கட்டண பட்டியல்கள் ஒரே தடவையில் கிடைக்கப் பெறுமாயின், முதலில் ஒரு பட்டியலுக்கு கட்டணம் செலுத்தலாம். மற்றைய பட்டியலுக்கான கட்டணம் ஒரு மாதத்திற்குள் செலுத்தலாமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நீர் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாதெனவும், அவர் தெரிவித்தார்.
முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில், அதற்கு பின்னரான மாத நீர் கட்டண பட்டியலில், பொதுமக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி ஏற்பட்டாலோ அல்லது, நீர் கட்டண பட்டியல்களில் மாற்றம் செய்ய வேண்டி ஏற்பட்டாலோ, அடுத்த மாதத்தில் அதனைக் குறைத்து அல்லது, அதிகரித்து சீர் செய்யப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.
from tkn