இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கு லண்டன் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுடனான தனது போரின்போது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜோன்சன் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் திங்களன்று பணிக்குத் திரும்பினார்.
ஆண் குழந்தை பிறந்த செய்தியைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பிலிருந்தும் போரிஸ் ஜோன்சன்-கேரி சைமண்ட்ஸ் ஜோடிக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
Fri, 05/01/2020 - 11:02
from tkn