மணிப்புரத்தில் வீடு கையளிப்பு

வவுனியா மணிப்புரம் பகுதியில் நீண்டகாலமாக கொட்டில் வீடொன்றில் வசித்து வந்து குடும்பம் ஒன்றுக்கு புதிய வீடு ஒன்று கையளிக்கப்பட்டது.

குறித்த குடும்பத்தின் வறுமை நிலையை கருத்திற்கொண்டு வவுனியாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரசிக்கா பிரியதர்சினி 2இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் செலவில் குறித்த வீட்டை அமைத்துக்கொடுத்துள்ளார். மூன்று பிள்ளைகளுடன் ஐந்துபேரை உள்ளடக்கிய அக் குடும்பம் தற்காலிக கொட்டில் ஒன்றில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்தது. இவ்வாறான வறிய குடும்பங்கள் வன்னி மாவட்டத்தில் அதிகம் இருக்கும் நிலையில் அவர்களுக்கான வசதிகளை உரிய அதிகாரிகள் பெற்றுக்கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்புகளும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நிருபர்

Fri, 05/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை