தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் யாவும் திறப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு -12,  பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல, சுதுவெல்ல பிரதேசம் திறந்து விடப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட்  ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். 

இதற்கமைய, இப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், இலங்கையில் கொவிட் -19 தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எதுவும் இல்லை என, அவர் தெரிவித்தார்.

Fri, 05/15/2020 - 11:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை