அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ள விசேட விமானம்

கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக, அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானமொன்று, இன்று (08) அதிகாலை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகர் நோக்கி புறப்பட்டுள்ளது.

கல்வி நடவடிக்கைகளுக்காக சென்ற நிலையில், அங்கு சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் குழு மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இதற்கு முன்னர், லண்டனிலும் துபாயிலும் சிக்கியிருந்த இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

Fri, 05/08/2020 - 09:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை