கொரோனாவிலிருந்து உலக மக்கள் விடுபட கொட்டகலை த.ம.வி மாணவர்கள் வழிபாடு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முழு உலகமே முடங்கியிருக்கின்ற நிலையில் கொரோனாவிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி கொட்டகலை த.ம.வி மாணவர்கள் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு வீட்டின் முன்னால் விளக்கேற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.

பாடசாலை நிர்வாகம் எடுத்துள்ள தீர்மானத்தின் பிரகாரம் மாணவர்கள் இவ்வாறு வழிபடுவதாக பாடசாலை அதிபர் ஆர்.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் தற்போது கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் இணைந்து இவ்வாறு விளக்கேற்றி வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

பூண்டுலோயா நிருபர்

Sat, 05/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை