மழையுடனான வானிலை அதிகரிக்கும் சாத்தியம்!

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக, அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

மேல், தென், வடமத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென், மேல் மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென், மத்திய மாகாணங்களிலும்  அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான  மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

 

Wed, 05/13/2020 - 09:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை