அவுஸ்திரேலியாவில் சமூக இடைவெளியை பின்பற்றாத அமைச்சர் இராஜினாமா

அவுஸ்திரேலியாவில் அரசு பிறப்பித்திருந்த சமூக இடைவெளியை பின்பற்றாத டிரேவர் வாட்ஸ் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் காவல்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு இலாகாவின் நிழல் அமைச்சராக பதவி வகித்து வந்தவர் டிரேவர் வாட்ஸ்.  இவர்   கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சட்டமன்ற தொகுதியான வடக்கு டூம்பாவோ நகரின் அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது  அவரும் 2 பொலிஸ் அதிகாரிகளும் கொரோனா ஊரடங்கையொட்டி மாகாண அரசு பிறப்பித்திருந்த சமூக இடைவெளி கட்டாயம் என்கிற உத்தரவை மீறியதாக கூறப்படுகிறது.இது அவுஸ்திரேலியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டிரேவர் வாட்ஸ் உள்ளிட்ட மூவருக்கும் தலா 1 334 அவுஸ்திரேலிய டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

அமைச்சரே அரச உத்தரவை மீறிவிட்டதால் அவர் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்தது. இந்த நிலையில்  டிரேவர் வாட்ஸ் தனது அமைச்சர் பதவியை நேற்றுமுன்தினம் இராஜினாமா செய்தார்.  

Fri, 05/01/2020 - 10:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை