A/L பரீட்சைக் கட்டணத்தை செலுத்த வசதி

க.பொ.த. உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிக்க விரும்பும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள், அதற்குரிய பரீட்சைக் கட்டணத்தை அருகிலுள்ள தபால் நிலையத்தில் செலுத்த முடியுமென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

எதிர்வரும் 15ஆம் திகதி வரை இதற்கான கட்டணத்தை செலுத்த முடியுமெனவும், பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை, பரீட்சைக் கட்டணம் ஏற்றுக்கொள்ளும் முறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதோடு, இச்செயற்பாடு தற்போதே செயற்படுத்தப்பட்டுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

பரீட்சார்த்திகள் எந்தவொரு தபால் நிலையத்திற்கும் சென்று முடிந்தவரை விரைவாக பரீட்சைக் கட்டணத்தை செலுத்த முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.

Tue, 05/12/2020 - 14:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை