இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த மிகவும் வயதான நபராக, 94 வயதான பெண் ஒருவர் பதிவாகியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டு வெலிக்கடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் அங்கிருந்து கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஐ.டி.எச். மருத்துவமனையில் சுமார் ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த இவர், தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண், மருத்துவமனையில் இருந்து வெளியேறியபோது, வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் அவரை மிக மகிழ்ச்சியுடன் பூச்செண்டு வழங்கி வழியனுப்பி வைத்துள்ளனர்.
Wed, 05/20/2020 - 16:34
from tkn