குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், எட்டு பேர் காயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
டிக்கோயா தரவலை தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அம்பிகா (52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
டிக்கோயா தோட்ட 18ஆம் இலக்க தேயிலை மலையில் அவர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில், மரத்திலிருந்த குளவி கூட்டை கழுகு கொத்திய நிலையில் குளவிகள் கலைந்து வந்து வேலை செய்தவர்களை கொட்டியுள்ளது.
இதில் ஆறு பெண்களும் இரண்டு ஆண்கள் உட்பட சாரதி ஒருவருமாக ஒன்பது பேர் காயமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஏனைய எட்டு பேரும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம்.கிருஸ்ணா, ஹட்டன் கே.சுந்தரலிங்கம்)
from tkn