தற்போது நிலவும் மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து, 07 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறித்த எச்சரிக்கையை இன்று (27) விடுத்துள்ளது.
இதற்கமைய இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா, காலி, களுத்துறை, மாத்தறை மாவட்டங்களுக்கு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த மாவட்டங்களில் மலைப்பாங்கான மற்றும் அதனை அண்டி வசிக்கும் மக்கள் நிலச்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Wed, 05/27/2020 - 13:10
from tkn