சூதாட்டத்தில் ஈடுபட்ட நாவலப்பிட்டி நகரசபை தலைவர் உட்பட 7 பேர் கைது

நாவலப்பிட்டி நகரசபை தலைவர் உட்பட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே நேற்றுமுன்தினம் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹற்றன் பொலிஸ், ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், வட்டவளை மற்றும் கினிகத்தேனை பொலிஸார் இணைந்து குறித்த சுற்றுலா விடுதியை சுற்றிவளைத்தனர்.

பொலிஸாரின் முற்றுகையையடுத்து அங்கிருந்து சிலர் தப்பியோடியுள்ளனர். அவர்களையும் கைதுசெய்வதற்கான தேடுதல் வேட்டை தொடர்கின்றது.

சூதாட்டத்துக்காக பயன்படுத்தப்பட்டிருந்த 60 ஆயிரம் ரூபா பணம், மதுபான போத்தல்கள், நகரசபை தலைவரின் சொகுசு வாகனம் மற்றும் அவரின் சகாக்கள் பயணித்த வாகனம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்களை ஹற்றன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளதாக பொலிஸ் தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஹட்டன் சுழற்சி நிருபர்

Sat, 05/02/2020 - 10:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை