இரத்தினபுரி மாவட்டத்தில் 6 பிரதேச செயலர் பிரிவுகளில் மண்சரிவு அபாயம்

கட்டிட ஆய்வு நிலையம் எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தில் 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்ட கட்டிடங்கள் ஆய்வு நிலையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இரத்தினபுரி, பெல்மதுளை, கலவான, நிவித்திகல, எலபாத்த, அயகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளின் மேட்டுப்பாங்கான நிலங்களில் இந்த மண்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

பிரதேச செயலக பிரிவுகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இவ்விடயம் தொடர்பில் இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் இப்பிரதேச செயலாளர் காரியாலயங்களின் அதிகாரிகள் இவ்விடயங்களில் அவதானத்தை செலுத்தி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

Mon, 05/18/2020 - 09:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை