குவைத்திலிருந்து 448 பேரை அழைத்துவர நடவடிக்கை

குவைத்தில்  தொழில்வாய்ப்புக்காக சென்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள 448 பேர் நாளை (19) மீண்டும் நாடு திரும்பவுள்ளனர்.

இக்குழுவினர்,  குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு,   குவைத் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் அவர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

அவர்களில் 65  பேர், குவைத்திலுள்ள தடுப்பு மைய்யத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.

அத்தோடு இவர்களில் 383 பேர், வீசா இன்றி பணியாற்றிய நிலையில் அந்நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தை பயன்படுத்தி இலங்கை வரும் நபர்களாவர்

இவர்கள் நாட்டிற்கு வருகை தந்த பின்னர், இராணுவத்தினரின் கீழ் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது. 

Mon, 05/18/2020 - 11:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை