இலங்கை பயணிகள் 320 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் இன்று (12) பகல் இந்தியாவின் சென்னையிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கைக்கு வர முடியாமல் இந்தியாவின் சென்னையில் சிக்கியிருந்த குழுவினரே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1122 எனும் விசேட விமானத்தின் மூலம் அவர்கள் இந்தியாவின் சென்னையிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று பகல் 12.35 மணிக்கு வந்தடைந்துள்ளனர்.
இவ்விமானப் பயணிகளுடன், கர்ப்பிணி பெண்களும் வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த குழுவினர், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
Tue, 05/12/2020 - 13:26
from tkn