பங்களாதேஷிலிருந்து 276 பேர் வருகை

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், பங்களாதேஷில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 276 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL 1423 எனும் விசேட விமானம் மூலம், பங்களாதேஷின் டாக்கா நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து இன்று (24) அதிகாலை 1.50 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தோரும், அவர்களின் பயணப் பொதிகளும் தொற்றுநீக்கம் செய்யப்பட்டன.

இதன் பின்னர், இப்பயணிகளின் உடல் வெப்பநிலை அளவிடப்பட்டதோடு, அவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பது தொடர்பிலும் பரிசோதிப்பதற்கான நடவடிக்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் எடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக இராணுவத்தினரால் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த விசேட பஸ் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

Sun, 05/24/2020 - 12:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை