பிரித்தானியாவிலிருந்து 221 பேர் வருகை

- இந்தியாவுக்கு 170 பேர் புறப்பட்டுள்ளனர்

இலங்கைக்கு வர முடியாமல், பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 221 பேர்,கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (29)  பகல் வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த குழுவினர், இராணுவத்தினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் மத்தியில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகின்றதா என்பது தொடர்பில்  சுகாதாரப் பிரிவினரால் பரிசோதிக்கப்பட்டனர்.

இதன் பின்னர், தனிமைப்படுத்தலுக்காக அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  

இதேவேளை, இலங்கையிலிருந்து புறப்பட முடியாமல் இருந்த இந்திய பிரஜைகள் 170 பேர், இந்தியாவின் விசேட விமானம் மூலம் இன்றையதினம் இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

Fri, 05/29/2020 - 13:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை