கொவிட் -19; குணமடைந்த கடற்படையினர் 237

கொவிட் -19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 16 கடற்படையினர் உட்பட, 237 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, கொவிட் -19 தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 16 கடற்படையினர் பூரண குணமடைந்து, வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (20) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பதினாறு பேரில் 07 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலும், 04 பேர் முல்லேரியா வைத்தியசாலையிலும், 03 பேர் IDH வைத்தியசாலையிலும், மற்றுமிருவர் வெலிக்கந்த வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

குறித்த வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில்  PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் முடிவுகளுக்கு அமைய குறித்த வைரஸ் தொற்று அவர்களது உடலில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

Thu, 05/21/2020 - 14:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை